திருக்குறள்

1225.

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.

திருக்குறள் 1225

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.

பொருள்:

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது.

மு.வரததாசனார் உரை:

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

சாலமன் பாப்பையா உரை:

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.